தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காடில் இன்று நாளையும் வரண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.