திருப்பூர் அருகே 17 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த சமுதீன் என்பவர் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவர் அவினாசி பகுதியில் சேர்ந்த சரவணகுமார் என்பவரிடம் 17 லட்சம் ரூபாய் வாங்கி வரச் சொல்லி தன்னிடம் பணியாற்றும் சாகுல் அமீத் என்பவரை அனுப்பியுள்ளார்.

இதனிடையே சாகுல் அமீத் 17 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த மூன்று நபர்கள் சாகுல் அமீத்தை வழிமறித்து அவரிடம் இருந்த 17 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து சாகுல் அமீத் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றது பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.