67 வயதில் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ள மூதாட்டி சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார். சைக்கிள் ஓட்டுவது அநேக பேருக்கு மிகவும் விருப்பமானது என்றாலும் அது இளமையில் தான் எளிதில் நிறைவேறும். முதுமையில் ஓய்வெடுக்கவோ இளவட்டங்கள் நிகழ்த்தும் சாதனைகளைக் கண்டு ரசிக்கவோ தான் மனம் விரும்பும். ஆனால் இதற்கு விதிவிலக்கு ஆகியுள்ளார் கேரள மூதாட்டி. 67 வயதாகும் அந்த மூதாட்டி அந்தரத்தில் சிறிதளவும் பயமின்றி சைக்கிள் ஓட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதுடன் பலரின் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் போக்கியுள்ளார்.

வயது என்பது வெறும் நம்பர் மட்டும் தான். தைரியத்துக்கோ சாதனை செயலுக்கு அந்த நம்பர் ஒரு தடையில்லை என்பது போல தன்னம்பிக்கை பெண்மணியாக அனைவருக்கும் முன்னுதாரணமாகியுள்ளார் அந்த சேச்சி. தனது சாகசம் பற்றி கூறியுள்ள மூதாட்டி, நான் பயப்படவில்லை மகனே. நான் நன்றாக சைக்கிள் ஓட்டுவேன். என் அருகே நீ இருந்தால் போதும் என்று தனது மகனிடம் தெரிவித்துள்ளதாக இணையத்தில் தகவல் வைரலாகி உள்ளது.