சினிமா உலகில் நடிகர்கள், நடிகைகள் என பலரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் பழம்பெரும் நடிகரான ஜெய்சங்கர் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது.

இவர் தமிழ் சினிமா உலகிற்கு 1965 ஆம் ஆண்டு வெளியான இரவும் பகலும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் நடித்து வந்த அவர் 1990 வரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். அவர் முரட்டுக்காளை திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்தார். நடிகர் ஜெய்சங்கரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அழைத்தனர் குறிப்பிடத்தக்கது.

படம் எடுப்பது பற்றி அவரின் மகன் சஞ்சய் சங்கர் தெரிவித்துள்ளதாவது, நிறைய பேர் எனது தந்தை ஜெயசங்கர் வாழ்க்கையை படமாக எடுக்க கேட்கின்றார்கள். இதனால் எங்களுக்கு ஆர்வம் வந்திருக்கின்றது. அதற்கான நேரம் வரும்போது படமாக எடுப்போம் என தெரிவித்திருக்கின்றார்.