ஏ.ஆர்.ரகுமானின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகின்றது.

ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் இறுதி நாமினேசன் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றது. அதில் சிறந்த பாடலுக்கான பிரிவில் அந்த பாடல் இடம் பெற்றிருப்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இதற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த ட்விட்டிற்கு நெட்டிசன் ஒருவர் ஆந்திர மக்கள் தமிழர்களை வெறுக்கின்றார்கள். ஆனால் நாம் எதிரிகளை நேசிக்கின்றோம் என ட்வீட் செய்து இருக்கின்றார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளதாவது, நாமெல்லாம் ஒரே குடும்பம். நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கின்றார்.

https://twitter.com/itskrishtweetz/status/1618263124687335426