ஏ.ஆர்.ரகுமானின் தங்கை தேசப்பற்று ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் தங்கை இஷ்ரத் காதரி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த திரைப்படங்களில் பாடியுள்ளார். இசை கச்சேரிகளிலும் பாடி இருக்கின்றார். இந்த நிலையில் அவர் தற்போது பாரதியார் எழுதிய எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி என்ற பாடலை எந்தையும் தாயும் என்ற தலைப்பில் இசை ஆல்பம் உருவாக்கி அவரே இசை அமைத்து பாடியிருக்கின்றார்.

மேலும் மாதேஷ் என்பவர் இயக்கி இருக்கின்றார். இதற்கு குருதேவ் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார். இவரின் இந்த ஆல்பத்தை கனிமொழி எம்.பி வெளியிட்டு இருக்கின்றார்.