கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவைக் கொடியை ஏற்றினார்.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவராக ராஜா, செயலாளராக பாலாஜி, பொருளாளராக அபிஷேக் சிங், துணைத் தலைவராக ரஜினி கண்ணம்மா, நகர செயலாளராக சிவா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர் என நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள்.