குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக நடிகை ஹன்சிகா தெரிவித்து இருக்கின்றார். தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோஹேல் கதுரியா திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கின்றார்.

அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் நாம் நல்லதை செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் அம்மா கூறுவார். அதனால் தான் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றேன் என்றும் கூறினார். இப்போது 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.