தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 2 மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டு மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக வஉசி துறைமுக ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

தற்போது இரண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பயணிகள் கப்பலை இயக்க ஒப்புதல் தந்துள்ளனர். இதனால் இரண்டு மாதங்களில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு இருக்கின்றது. கொரோனா காலத்தில் சில தொய்வுகள் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கொச்சி, கொழும்பு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல்  இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.