தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பனோத் இந்திரஜா. இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காரில் மணமகள் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் நடந்த திருமண கொண்டாட்டங்களை ஜன்னல் வழியாக தலையை வெளியே வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதனை கவனிக்காத கார் ஓட்டுநர் தானியங்கி பட்டனை அழுத்தி ஜன்னல் கண்ணாடியை பூட்டியுள்ளார்.

அப்போது சிறுமியின் கழுத்து ஜன்னலில் சிக்கி நெறிந்துள்ளது திருமண கொண்டாட்டத்தில் வான வேடிக்கை மேளதாளங்கள் இருந்ததால் சிறுமி வலியால் தவித்ததை உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மூச்சு திணறி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் உறவினர்கள் கார் ஓட்டுனரின் கவனக்குறைவு தான் இந்த இழப்பு காரணம் என்று குற்றம் சாட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.