ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை துவங்கிய பின், தற்போது டெல்லியிலிருந்து டேராடூனுக்கு இடையில் இயக்க தயாராக இருக்கிறது. மேலும் பல வழித்தடங்களில் இயக்கப்படும் இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்கு பதில் வந்தே பாரத் ரயில் சேவையை வழங்குவதற்கு ரயில்வே தயாராகி வருகிறது.

2 ரயில்களும் வந்தே பாரத் ரயிலாக மாற்றப்பட்ட பின், பயணிகளுக்கு பலவிதமான அதிக நுட்பமான வசதிகள் கிடைப்பதோடு பயணிக்க குறைந்த நேரமும் எடுக்கும். இந்த 2 ரயில்களிலும் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.