புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 ஜல்லிக்கட்டு காளைகளும், 99 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் காளைகள் முட்டியதால் 9 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து தயாராக இருந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.