தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கரகப்பட்டி ஏரி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை பார்த்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சின்னச்சாமி, ஜெகதீசன், முனியப்பன், பிரதாப், ரமேஷ், இளங்கோவன், பாக்கியராஜ், ராஜவேல், பழனிச்சாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 9 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 38,500 ரூபாய் பணம், 9 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.