திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

இதனால் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். அதே சமயம் கடுமையாக வெயில் வாட்டி வதைத்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.