ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மைசூர் பருப்பை விநியோகிக்க 8 வாரத்தில் முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மசூர் பருப்பை போல கேசரி பருப்பும் தோற்றமளிக்கிறது.

இதனால் முறைகேடுகளை தவிர்க்க மசூர் பருப்பை ரேஷனில் விநியோகிக்க தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் விரைவில் மசூர் பருப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.