மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி போட்டி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி பணி நிலைகளில் 7500 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இந்த காலை பணியிடங்களை நிரப்ப கணினி வழி தேர்வு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஏழு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வு எழுதுவோர்காக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளது. இத்துடன் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் யூட்யூப் சேனலிலும் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 3ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வழியில் கட்டணம் செலுத்த மே நான்காம் தேதி கடைசி நாள் ஆகும்.