மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டு முதியவர் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து மனைவியின் முகத்தில் வீசியுள்ளார்.

இதில் முகத்தில் காயம் ஏற்பட்ட மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 வயது முதியவரை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூதாட்டி வீடு திரும்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.