சிவசேனா சின்னத்தை பெற 2,000 கோடிக்கு டீல் நடந்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு சிவசேனாவின் பெயரும், சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாங்கள்  அணுகியிருக்கிறோம். 2,000 கோடி ரூபாய்க்கு டீல் பேசியே, ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் கட்சியின்  பெயரையும், சின்னத்தையும் பெற்றுள்ளனர். அதற்கான ஆதாரத்தை தகுந்த நேரத்தில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.