எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எஸ்.பி.ஐ வங்கி அம்ரித் கலாஷ் முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 400 நாட்கள் ஆகும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.1% வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்கள் என்றால் 7.6% வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி மார்ச் 2023 வரை மட்டுமே. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.8017 வட்டியாக பெறுவீர்கள்.