ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் பகுதியை சேர்ந்த 50 வயதான ஃப்லமினி என்பவர் time cave என்ற பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ள குகை ஒன்றில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அனுப்பப்பட்டார். உளவியலாளர்கள், உடற்பயிற்சியாளர்கள் மற்றும் குகை ஆய்வாளர்கள் என பலரின் கண்காணிப்பில் இருந்தாலும் 500 நாட்கள் வரை யாருடனும் நேரடி தொடர்பு இல்லாமல் குகைக்குள் வாழ்ந்தவர்.

இவர் தற்போது வெற்றிகரமாக இலக்கை நிறைவு செய்து வெளியே வந்துள்ளார். இவர் அந்த குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொரு நாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோ பதிவு செய்துள்ளார். 48 வயதில் குகைக்குள் சென்ற இவர் இரண்டு பிறந்த நாளை அங்கேயே கொண்டாடியுள்ளார். 70 அடி ஆழ குகைக்குள் யார் துணையும் இல்லாமல் 500 நாட்கள் வாழ்ந்து சாதித்துள்ளார். மனித மன உறுதியை சோதிக்கவே இந்த ஆய்வு நடந்துள்ளது.