அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைவது அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு முன்னதாக நேற்று காலை சேலம் நகரில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இபிஸ்க்கு ஆதரவு பெருகி வருவது ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.