தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்ட நிலையில் மாநிலத்தில் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய படிநிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதன்படி முதல் கட்ட தேர்வு வருகின்ற ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் ஹால் டிக்கெட் வெளியீடுwww.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் தேவையான விவரங்களை பதிவு செய்து நிறைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.