தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற ஈராண்டு சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டதோடு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின்,ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 6905 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன். கையெழுத்திட்டதோடு மட்டுமல்லாமல் 16 மாவட்டங்களில் கள ஆய்வுகளையும் செய்துள்ளேன்.மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க செய்ய வேண்டியதை செய்து வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.