கர்நாடக மாநிலத்தில் இருந்து 13 பேர் சரக்கு வானில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் நடக்கும் திருமண விழாவிற்கு வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 4-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு வேன் சென்றது. அப்போது திடீரென சரக்கு வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சடையம்மாள், வீரம்மாள், விக்ரம் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.