கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி குதிரைப்பந்தி விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாந்தி வெளிநாட்டில் வீட்டு நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடராஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த நடராஜன் நேற்று தனது மகன் வேலைக்கு சென்ற பிறகு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நடராஜனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நடராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.