தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு மதிப்பெண் மற்றும் கிரேடுகளை பதிவிடுமாறும், 8ம் வகுப்புக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதியுமாறும் கூறப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி குறித்து ஆசிரியர் குழு ஒப்புதலுடன் முடிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.