தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்க உள்ளது. ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் நிறைவடைய உள்ளதால் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க கடந்த வாரம் மாநில தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.