இந்திய ரயில்வேயானது தொடர்ந்து தன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. ரயில்வேயில் அதிகவேக ரயில்களின் அறிமுகங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மேலும் 5 புது வழித் தடங்களில் தொடங்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரையிலும் 18 வழித் தடங்களில் வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒரே சமயத்தில் 5 வழித் தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படவுள்ளது. முதன் முறையாக நாட்டில் ஒரே சமயத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி இருக்கிறது. ரயில்வே அமைச்சகத்தின் அடிப்படையில், வருகிற 26-ம் தேதி பிரதமர் மோடி ஒரே சமயத்தில் 5 வந்தேபாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார்.

புது வந்தே பாரத் வழித்தடங்கள்

# போபால் இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

# போபால் ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

# பாட்னா ராஞ்சி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

# பெங்களூர் ஹூப்ளி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

# மும்பை கோவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்