இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்து போர் நீடித்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடை நிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன்வந்துள்ளனர். இதற்கு முன்னதாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் போர் தொடங்கிய நாள் முதல் ஹமாஸ்ககு சொந்தமான 400 சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் மக்கள் அதிகம் புலங்கும் இடங்களான குடியிருப்பு பகுதிகள் மருத்துவமனைகள் பள்ளிகள் போன்றவற்றில் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் பாலஸ்தீனிய மக்களை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்தியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.