சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை பெரும் முக்கிய பங்காற்று வருகிறது. இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது .மேலும் மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயிலில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது சென்னையில் மிக முக்கிய பகுதியில் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஓட்டுநர் இல்லாத ரயில்களை வாங்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 38 ஓட்டுநர் மெட்ரோ ரயில்களை வாங்க முதலில் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது 70 ரயில்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.