சாத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் இருவரும் படிக்கட்டில் நின்று பயணம் செய்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக முற்றியது. இதில் இருவரும் தவறி கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரை விட்டார்