பொங்கல் பண்டிகையையொட்டி தல அஜித்தின் “துணவு” மற்றும் தளபதி விஜய்யின் “வாரிசு” படங்கள் வெளியாகியது. ஒரே நாளில் 2 உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். இந்த படங்கள் வெளியாகிய தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைத்தும், அதற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்நிலையில் வாரிசு, துணிவு திரைப்பட நள்ளிரவு சிறப்பு காட்சிகளை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதாவது, அனுமதி இல்லாமல் வெளியிட்ட புகாரில் மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதித்த நேரத்தை தவிர 11 ஆம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கு படங்களை திரையிட்டதாக புகாரளிக்கப்பட்டது.