இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீன ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் காசாவில் 320 இடங்களில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதன்படி கண்காணிப்பு கோபுரங்கள், சுரங்கப்பாதைகள், பயிற்சி மையங்கள், தலைமை இடங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் முகாம்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.