சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பச்சப்பட்டி மெயின் ரோட்டில் சக்திவேல்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி சக்திவேல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு மூன்று பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

இதனை சக்திவேல் தட்டி கேட்டதால் கோபமடைந்த மூன்று பேரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ், தீனா, தருண்ராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.