கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனால் சுப்பால் சிங், தனலட்சுமி, பாஸ்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 267 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.