கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் களியக்காட்டில் இருக்கும் கோவில் விழாவில் விஜயலட்சுமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது யாரோ விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். இதுகுறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா கட்சிகளை ஆய்வு செய்தபோது மூதாட்டியிடம் நகை பறித்த 3 பெண்களின் அடையாளம் தெரிந்தது. அதன்படி தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சிதா, மாரி, லலிதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையை மீட்டனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.