ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நடைபெற்றது. அதன்படி ரேஷன் கார்டு வைத்துள்ள 3,52,578 பேர் மற்றும் இலங்கை தமிழர்கள் உட்பட மொத்தம் 3,96,403 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 776 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன், பயிற்சி சக்கலைத்த நாராயண சர்மா, துணைத்தலைவர் பிரவீன் தங்கம், கூட்டுறவு இணைப்பதிவாளர் முத்துக்குமார், நகர் மாமன்ற தலைவர் கார்மேகம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், துணை பதிவாளர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.