மெட்டா (பேஸ்புக்) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்தில் நேரடியாக பணிக்கு வருவதற்கு புதிய விதிமுறைகளை ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என தீவிர அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று மனிதவள தலைவர் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது