தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில், 189 உறுப்புகளை 30 பேர் தானம் செய்துள்ளனர் என்று, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) தகவல் தெரிவித்துள்ளது. 2008 க்கு பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.