கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அணி ஒரே நாளில் ஆறு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பளு தூக்குதலில் தமிழ்நாட்டு வீராங்கனை கீர்த்தனா தங்கப்பதக்கமும் ஓவியா வெள்ளி பதக்கமும் வென்றனர்.

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் விநாயக்ராம், ஸ்வஸ்திக் ஆகிய இருவரும் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அதேபோன்று டென்னிஸ் இல் ஆடவர் மற்றும் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகள் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர். நீச்சல் போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் பிரிவில் ஸ்ரீநிதி நடேசன் தங்கப்பதக்கம் என்று உள்ளார்.