2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 2,599 காவலர்களை நியமிப்பதற்கு தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காவல்துறையின் எண்ணிக்கை தற்போது 1.34 லட்சம் ஆக உள்ளது. அதில் புதிய இரண்டாம் நிலை காவலர்களை விரைவில் தேர்வு செய்வதற்கான செயல்முறையை விரைவில் தொடங்க காவல்துறையின் மாநில தலைவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறைக்கான ஆட்சேர்ப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகின்றது.