அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி சில சமயங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் என உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி, இன்று நடைபெற உள்ள இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை காண நானும் ஆர்வமாக உள்ளேன்.

ஆனால் டிக்கெட் தான் கிடைக்கவில்லை. டிக்கெட் கிடைத்தால் சொல்லுங்கள். நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். அதை நாங்கள் டெல்லிக்கு அனுப்பப் போகிறோம். ஆளுநர் மாளிகை முன்போ அல்லது மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தால் வந்து கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் உள்ளதா என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.