மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் பிறந்த தலா 6 ஆண், பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பாம்பு கடி உள்ளிட்டவற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். மருந்துகள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அரசு மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.