நடிகை சிம்ரன் 1999 ஆம் ஆண்டு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் வாலி ஆகிய தமிழ் படங்களில் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்று பிரபலமானார். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் . அதன்பின்னர் 2000 ஆம் ஆண்டில், அவர் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் எதிரியாகவும் , பிரியமானவளேயில் திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தத்தில் விழும் குடும்பப் பெண்ணாகவும் நடித்தார். இந்த  இரண்டுமே வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தன. தற்போது ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிம்ரனின் சகோதரியும் நடிகையுமான மோனல் கடந்த 2002 ஏப்ரல் 14ஆம் தேதி தனது 21வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்து இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. இதை நினைவு கூர்ந்து தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் சிம்ரன். அதில், ‘அன்பு சகோதரி மோனலின் நினைவாக, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்’ என குறிப்பிட்டுள்ளார்.