2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவில் 40 தொகுதிகளுக்கான விருப்ப மனு  விநியோகம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக  அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம் என அதிமுக அறிவித்துள்ளது.