பல்கேரியன் ஆட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மெசிடோனியாவில் பிறந்தவர். இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார். அதன் பிறகு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இவருக்கு கிடைத்த நிலையில் 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கனித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்து இவர் கூறிய கணிப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இவரின் கணிப்பு அப்படியே நடப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரம் பாதிக்கும் என அவர் கணித்த நிலையில், பிரிட்டனும், ஜப்பானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதேபோல புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் சமீபத்தில் அறிவித்தார். இதுவும் வங்காவின் கணிப்புகளில் ஒன்று.