2023 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 141 ரன்கள் எடுத்ததும் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகத்தில் குதித்தனர். பத்து ஆட்டங்களிலும் இந்திய அணியை வெற்றியுடன் கொண்டுவந்த இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த வேதனையில் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டார் .

மேலும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். சிராஜ் மற்றும் ராகுல் உணர்ச்சிவசப்பட சக வீரர்கள் ஆறுதல் கூறினர். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கண்களில் கண்ணீர் ததும்பியது. மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு வெளியேறினார். 2014 ஆம் ஆண்டு முதல் 9 நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.