உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆட்கொடைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு மெக்கின்சி அண்ட் கோ என்ற நிறுவனம் ஆலோசனை வழங்கி வந்தது. தற்போது அந்த நிறுவனத்தில் ஏன் லாபம் குறைந்து உள்ளதால் 2000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.