ஹரியானா செக்டார் 43 பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சென்ற மார்ச் 3-ம் தேதி கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் எனக் கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் உங்களுக்கு வந்த சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என கூறியிருக்கின்றனர். இதையடுத்து அடுத்த நொடியே அழைப்பு வேறொருவருக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் இணைந்த 2 பேர் தங்களை துணை போலீஸ் கமிஷனர் பால்சிங் ராஜ்புத், மும்பை போலீஸின் சைபர் கிரைம் துறையின் அஜய் பன்சல் என அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன்பின் அந்த பெண்ணிடம் உங்க ஆதார் எண் வழியாக பல குற்ற செயல்களுக்கான பரிவர்த்தனைகள் நடந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த பண மோசடி தொடர்பாக சீக்ரெட் ஆப்ரேஷனை ஆரம்பிக்க பெண்ணிடம் ரூ.4,99,999 அனுப்ப சொல்லி இருக்கின்றனர். அந்த பெண்ணும் பயந்து போய் பணத்தை அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் பண பரிமாற்றத்திற்குப் பிறகு செக்யூரிட்டி டெபாசிட் ஆக கூடுதல் பணத்தை மாற்ற கூறியிருக்கிறார்கள். இவ்வாறு ரூ.20,37,194-ஐ அந்த பெண் மாற்றியுள்ளார். அதன் பிறகே அந்த கொரியர் கம்பெனி, மும்பை போலீஸ் அனைத்தும் போலி என அவருக்கு தெரியவந்தது. இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.