விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கத்தாளம்பட்டி பகுதியில் பாரதி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சண்முகசுதன்(32), பால்ராஜ்(61) ஆகியோருடன் காரில் சாயல்குடியில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் கத்தாளம்பட்டி கிரஷர் அருகே சென்றபோது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சண்முகசுதனும், பாரதியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பால்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகசுதன் மற்றும் பாரதி ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.